தமிழர்களின் வழித்தோன்றல்கள் வாழும் ரீயுனியன் தீவு
தமிழர்களின் வழித்தோன்றல்கள் வாழும் ரீயுனியன் தீவு இந்த தீவின் மொத்த மக்கள்தொகை சுமார் எட்டரை லட்சம். அதில் தமிழர்களின் எண்ணிக்கை மட்டுமே ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு சுமார் இரண்டு லட்சம்.
![]() |
| ரீயுனியன் தீவின் சின்னம் |
![]() |
| ரீயுனியன் தீவின் கொடி |
![]() |
| உலக வரைபடத்தில் ரீயுனியன் |
![]() |
| உலக வரைபடத்தில் ரீயுனியன் |
இது எனது தனிப்பட்ட கட்டுரை அல்ல. இக்கட்டுரை எனக்கு கிடைத்த அனைத்து தகவல்கள் மற்றும் புகைப்படங்களின் ஒரு கூட்டுத்தொகுத்து மட்டுமே.
தீவின் அடிப்படை தகவல்கள்:-
![]() |
| ரீயுனியன் தீவின்அமைப்பு மற்றும் உயரிய மலை அமைந்துள்ள இடம் |
![]() |
| தீவின் இயற்கை அமைப்பு |
ரீயுனியன் இந்தியப்பெருங்கடலில் அமைந்துள்ள அமைந்துள்ள ஒரு தீவு. இது மடக்காஸ்கரின் கிழக்கே, மோரிசியசிலிருந்து 200கிமீ தென்மேற்காக அமைந்துள்ள மிகச்சிறிய தீவு. ரீயூனியன் தீவு 63 கிமீ நீளமும், 45 கிமீ அகலமும் கொண்டது 2,512 சதுர கிமீ பரப்பளவே உள்ள இந்த தீவின் மொத்த மக்கள் தொகை சுமார் 837,868 (2012
சனவரியின் படி) இதன் தலைநகரம் செயிண்ட்டெனிஸ்.
இத்தீவு முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்கடலில் வெடித்து உண்டான ஒரு பெரிய எரிமலைகக்கிய குழம்பால் உருவானது. எங்குப்பார்த்தாலும் மலைகளும் ஆறுகளும் பல்வகைத்தாவர இனங்களுமாய் இத்தீவு நெஞ்சையள்ளும் அழகுடன் திகழ்கிறது.
இயற்கை வளங்கள்:-
இத்தீவின் கிழக்கு எல்லையில் உள்ள ஒரு கேடய எரிமலை (பைத்தன் டி லா போர்னைசி) கடல்மட்டத்தில் இருந்து 2,631 மீட்டர் வரை வெடிக்கக்கூடியது, இது அவாய் தீவுகளின் எரிமலைகளின் இயல்புகளை ஒத்தது. 1640 ஆம் ஆண்டு முதல் இவ்வெரிமலை நூற்றுக்கும் அதிகமான தடவைகள் சீற்றம் அடைந்திருக்கின்றது. கடைசியாக 2010 சனவரி 2 இல் சீற்றம் அடைந்தது. பைத்தன் டெஸ் நெய்ஜெசு என்ற எரிமலை என்பதே இத்தீவின் மிக உயரமான புள்ளி ஆகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 3,070 மீ ஆகும். இந்த இரண்டு எரிமலைகளினது சாய்வான நிலப்பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும். தலைநகர் சென்-டெனிசு போன்ற பயிரிடும் நிலங்களைக் கொண்ட பிரதேசம் தீவின் கரையோரத் தாழ்நிலங்களில் அமைந்துள்ளன. மேற்குக்கரை கடற்பகுதியில் பவளபறைகள் அதிகம் காணப்படுகின்றன.
ரீ யூனியனின் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம் அதன் மழை வளம் 1966 சனவரி 7 முதல் 8 வரை தீவின் மத்திய பகுதியில் சிலாவோசு என்ற இடத்தில் 1,869.9 மில்லிமிட்டர் மழைபெய்தது. இதுவே உலகில் 24 மணி நேரத்தில் பெய்த அதிக மழை பொழிவு ஆகும்.
பிரான்ஸ் நாட்டின் அங்கநாடு:-
ரீயூனியன் தீவுதற்சமயம் பிரான்ஸ் நாட்டில் கடல்கடந்த ஓர் அங்கநாடாக (French Overseas Department) விளங்குகிறது. இது பிரான்சின் 27 பிராந்தியங்களில் ஒன்றாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவாரிப் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது யூரோ வலயத்திலும் உறுப்புரிமை வகிக்கிறது.
தீவின் மக்கள்தொகையும் குடியேற்றங்களும்:-
ரீயூனியனில் 18 ஆம்நூற்றாண்டில் 1797 ஆம் ஆண்டளவில் இருந்த மொத்த மக்கள்தொகை 56,800. வெள்ளையர்கள் 10,400; உரிமை பெற்ற மனிதர்கள் 1,600; அடிமைகள் 44,800 ஆகும். 1850 ஆம் ஆண்டளவில் ரீயூனியனில் இருந்த மொத்த மக்கள் தொகை 1,10,891 ஆகும். தமிழர்களும் 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே குடியேறியிருந்தார்கள்.
தீவின் அரசியல் வரலாறு;-
இத்தீவு 1520 ஆம் போர்த்துக்கீசிய மாலுமியால் கண்டுபிடிக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது. பிறகு ஆங்கிலேயர்கையிலும் பிரெஞ்சுக் காரர்கையிலும் சிற்சில காலம் மாறிமாறியிருந்து கடைசியாக 1816 இலிருந்து பிரெஞ்சுக்காரர்கையில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. பண்டைத்தமிழர்கள் இந்துமாக்கடலைக் கடந்து ஐரோப்பாவிற்கும் ஆப்பிரிக்க, மேற்கு ஆசியநாடுகளுக்கும் சென்றபோது இத்தீவைப் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழர்களோ பிற இந்தியர்களோ 17 ஆம் நூற்றாண்டு வரை இத்தீவுக்குச் சென்று குடியேறியதாகச் வரலாற்று சான்றுகள் கிடையாது.
அரசியல்:-
ரீயூனியன் தீவை ஆரம்பத்தில் பண்படுத்த வேலையாட்கள் தேவையாக இருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுவெள்ளை முதலாளிகள் ஆப்பிரிக்காவின் காப்பிரிமக்களையும் மடகாஸ்கரின் பழங்குடிமக்களையும் அடிமைகளாக கொண்டுவந்து ரீயூனியனில் கரும்பு, சோளம், மணிலா முதலியவற்றைப் பயிரிட்டனர். சர்க்கரை ஆலைகளிலும் அவர்களை வேலை வாங்கினார்கள் 1848 இல் பிரெஞ்சுப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதால், வெள்ளை முதலாளிகள் வேறு வழியின்றித் தங்கள் அடிமைகளை விடுதலை செய்துவிட வேண்டியதாயிற்று. எதிர்பாராத இந்த விளைவினால் இத்தீவின் பொருளாதார முதுகெலும்பே ஒடிந்து போய்விட்டதாக 1850 இல் இங்குப் பிரயாணம் செய்த ஆங்கிலேயர் ஃபிரடரிக் என்பவர் தம் ரீயூனியப் பயணநூலில் குறிப்பிடுகிறார். கரும்புச் சாகுபடியை வெகுவாகப் பெருக்கிச் சர்க்கரை விற்பனையில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டிருந்த வெள்ளை முதலாளிகளை இந்த அடிமையொழிப்புச் சட்டம் திக்குமுக்காடச் செய்துவிட்டது.
தமிழக மக்களை அழைத்துவருதல்:-
அதனால் உடனே இந்தியாவின் பிரெஞ்சுப் பகுதிகளான பாண்டிசேரி பிரெஞ்சுப் பிரதேசமாக இருந்தபோது 1827 ஆம் ஆண்டு தொடங்கி சுமார் 25வருடங்கள் தொடர்ச்சியாக, பாண்டிச்சேரி, காரைக்கால், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், போன்றபகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் அப்போதைய நாட்களில் ஒரு பிரெஞ்சு காலனியாக இருந்த ரீயூனியன் தீவில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இரண்டும் பிரெஞ்சுப் பிரதேசங்களாக இருந்ததால் விசா, பாஸ்போர்ட் போன்ற பிரச்சினைகளே இல்லை.
ஆனால் 1828க்கு முன்னமேயே சில இந்தியர்கள் கோவா பக்கத்திலிருந்து அடிமைகளாகவே வந்திருந்தனர் என்று தெரிகிறது. 1828 இல் ஆந்திராவிலிருந்தும் 15 பேர் வந்தனர் என்னும் குறிப்புகள் உள்ளன.
இவ்வாறாக 1848 க்கு முன் இங்கிருந்த இந்தியர்களின் எண்ணிக்கை மொத்தம் 4200 தான். இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவ்வெல்லாரையுமே வெள்ளைத்துரைமார்கள் தமிழர்கள் என்றே பொதுவாகக் குறிப்பிட்டனர். அதற்குக் காரணம் அந்தக்காலத்தில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய இரு பிரெஞ்சிந்திய வட்டாரங்களிலிருந்து வந்த தமிழ் ஒப்பந்தக் கூலியாட்களே எண்ணிக்கையில் மிகப்பெரும்பான்மையினர். அவர்களே கரும்புத் தோட்டங்களிலும் சர்க்கரை ஆலைகளிலும் வேலை செய்தனர். அவர்களே முதலாளிகளின் வீடுகளில் சமையல்காரர்களாகவும், மெய்க்காவல்காரர்களாகவும் வேலைகளை மேற்பார்க்கும் மேஸ்திரிகளாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். இப்படியாக வந்தவர்களில் மிகச்சிலரே தங்கள் ஒப்பந்தம் முடிந்து தாயகம் திரும்பினர். ஏனையோர் இங்கேயே தங்கி விட்டனர். அதற்கு முக்கியகாரணம் இங்கேயே தொடர்ந்து வசிப்பவர்கள் இந்தநாட்டின் குடிமக்களாவர் என்ற அரசாங்க சட்டமும், சாதீய வேறுபாட்டுத் தாழ்வுணர்ச்சியின்றி எல்லோரும் சமமாகவாழும் சமரசவாழ்க்கை முறையும், வேலைநிச்சயமும், கூலிநிச்சயமும் ஆகும்.
1946 வரையில் பிரெஞ்சுக்காலனியாக இருந்துவந்த இத்தீவு1947 இல் பிரெஞ்சு நாட்டின் கடல் கடந்த அங்கநாடு என்று சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அன்று முதல் பிரான்ஸ் நாட்டுமக்களுக்கு என்னென்ன குடியுரிமையுண்டோ அனைத்து உரிமைகளையும் பெற்று பிரெஞ்சுக்காரர்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு வெள்ளையினக்கிரியோல், தமிழர், ஆப்பிரிக்க நாட்டுக் காப்பிரியர்கள், மலகாஷ், கொமோர் தீவுகளின் மக்கள், சீனர்கள், வியாபாரம் நிமித்தம் கடைசியாக இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்த இந்திய குஜராத்தி முஸ்லீம்கள் ஆகிய பல இனத்தவரும் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
தமிழரின் இன்றைய நிலை :-
சமயம் :-
ரீயுனியன் மக்களின் சமய விழாக்களின் சார்ந்த சில புகைப்படங்கள்:-
இடைக்காலத்தில் ரீயூனியன் தமிழரின் திருமணம், சவ அடக்கம் ஆகிய சடங்குகள் கிறித்துவ முறையில் நடந்தது குறைந்து இப்பொழுதெல்லாம் இந்து சமயமுறைப் படி நடப்பது பெருகி வளர்ந்து வருகின்றது. பெற்றோர் மணம் பேசுவதென்பதில்லை. பெண்ணும் பிள்ளையும் சந்தித்துப் பழகிய பிறகு, பெற்றோருக்கு அறிமுகமாகிப் பின்னரே இரு வீட்டினரும் இணைந்து திருமணம் முடித்துவைக்கின்றனர். வரதட்சிணை முறை இங்கில்லை. திருமணச்செலவை இருவீட்டாரும் சமமாகப்பகிர்ந்து கொள்கின்றனர். பிறந்த குழந்தைக்கு உரியகாலத்தில் முடியிறக்கித் தெய்வப்பிரார்த்தனையை நிறைவேற்றுவது வழக்கமாய் உள்ளது. ஆனால், காதுகுத்துதல் வழக்கொழிந்து விட்டது. இறந்தவர்களைக் கல்லறையில் அடக்கம் செய்வதே பின்பற்றப்படுகிறது. இங்கு ஒவ்வொரு ஊரிலும் ஒரு கோயிலுண்டு. சிவன், முருகன், காளிக்கோயில்கள் அதிக முண்டு. தலைநகரமான செயிண்ட்பியரி (Saint Andre) முதலிய இடங்களில் முருகன் கோயில்கள் இருக்கின்றன. சிவ, திருமால் கோயில்களில் தமிழ்நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குருக்கள் பணியாற்றுகின்றனர்.
நூற்றாண்டுகள் கடந்தும் தமிழர்களின் பொதுவான பண்பாட்டுக்கூறுகள்:-
1980 இல் மொரீசியஸ் தமிழ் மொழிவிழிப்புக்குப்பின் சில தமிழ்ப்பண்டாரங்கள் ரீயூனியன் கோயில்களில் தமிழில், வடமொழியில் அர்ச்சனை செய்கிறார்கள். அதற்கு முன்பு பிரெஞ்சுமொழிதான் இத்தீவில் உள்ள தமிழர்கள் கோயில்களின் ஆட்சிமொழி. ரீயூனியன் தமிழர்களிடையே பெரும்பாலும் கிராமத் தேவதை வழிபாடே அதிகமாகக் காணப்படுகிறது. டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் திரௌபதையம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா சிறப்பாக நடைபெறுகின்றது. பெண்கள் தீக்குழியினைச் சுற்றிவலம் வருவதோடு சரி; தீமிதிப்பதில்லை. மாரியம்மனுக்குமே, சூன் மாதங்களில் கஞ்சி ஊற்றுத்திரு விழா நடைபெறுகின்றது. காளியம்மனுக்கு டிசம்பர், ஜனவரி, சூலை மாதங்களில் ஆட்டுக்கடா, கோழி முதலியன பலி தந்து விழா கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாக்கள் பத்து நாட்களுக்குக்குறையாமல் கொண்டாடப்படுகின்றன. பொதுக்கோயில்கள் மட்டுமல்லாமல், கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் தோட்டத்திலும் காளி, மாரி, முனி, வீரன், கருப்பு முதலிய தேவதைகளுக்குச் சிறுகோயில்கள் எழுப்பி மாதந் தோறும் வழிபாடு செய்து வருகின்றனர். இது இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கின்ற சுவாமி அறை பூசையை ஒத்திருக்கின்றது.
நகரங்களில் உள்ள சிவசுப்ரமணியர், பெருமாள் ஆகிய தெய்வங்களின் கோயில்களில் ஆண்டு தோறும் பத்து நாள் உற்சவம் நடைபெறுகின்றது. அப்போது ஏராளமான மக்கள் நாள் தோறும் கோயிலுக்கு வந்து வழிபாடுகளில் பங்கேற்கின்றனர்.
ரீயுனியன் தீவில் உள்ள கோவில்களின் படங்கள் சில:-
முருகன் கோயிலாக இருந்தால் புரட்டாசி மாதம் முழுவதும் சனிக்கிழமை தோறும் பெரிய அளவில் விழாவெடுத்துக் கோவிந்தனை வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தியையும் இரவு முழுவதும் கண்விழித்து அவனது வரலாற்றினைப் பக்தியுடன் கேட்டு மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். திருவிழாக்களின் போது சாமி ஊர்வலமும், சக்திகரக ஆட்டங்களும், அலகுகுத்தி ஆடுவதும் சிறப்பாக நடைபெறும். ஊர்வலத்தின் போது பக்தர்கள் வீடுதோறும் தீபாரதனை செய்வார்கள்.
தமிழ்க் கிறித்துவர்கள் நீண்ட கவுன்களும் மேக்சிகளும் அணிந்துவந்து இந்துக்கோயில்களில் தவறாமல் வழிபடுகிறார்கள். ரீயூனியன் தமிழர்கள் தைப்பொங்கல், தீபாவளி, தமிழ் வருடப்பிறப்பு ஆகியவற்றை கோயிலில் கொண்டாடுகின்றனர். இந்நாட்களில் சூரியனுக்குச்சிறப்பான பூசைகள் நடக்கின்றன. பிரதி வருடமும் சூலை 14, நவம்பர் 11, டிசம்பர் 20 ஆகிய நாட்கள் தேசிய விழா நாட்களாக அரசாங்கத்தாலும் பொதுமக்களாலும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
தொழில்:-
தமிழர்கள் அனைத்து தொழில்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். கரும்பு தோட்ட வேலை, கட்டிடக் காண்டராக்ட், சாலைக் காண்ட்ராக்ட், பஸ், லாரி போக்குவரத்து ஆகியவற்றிலும், சிமெண்டு உற்பத்தித் தொழிற்சாலை, கருங்கல் ஜல்லி தயாரிப்புத் தொழிற்சாலை முதலியவற்றிலும் தமிழர்கள் பெரும்பங்கு வகிக்கின்றனர். தமிழர்கள் விவசாயத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். மக்களுக்குத் தேவைப்படும் இன்றியமையாப்பொருள்களை இங்கேயே உற்பத்திசெய்வதைக் காட்டிலும், வெளியிலிருந்து தருவிக்கப்படுவது மிகவும் விலை சகாயமாக அமைவதால், இங்குப் பெரிய தொழிற்சாலைகள் நிறுவப்படுவதில் போதிய அக்கறையோ அவசியமோ இதுவரையிலும் ஏற்படவில்லை. சர்க்கரை ஆலைகள் மட்டும் நவீனமயமாக்கப்பட்டுப் பெரிய அளவில் நடந்துவருகின்றன. சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது. தமிழர்களில் 28 சதவீததினர் அரசியல், தொழில், வாணிபத்தில் ஈடுபட்டுள்ளனர். வெட்டிவேர், வன்னிலா, ஜெரானியம் போன்றவா சனைப்பயிர்த் தொழில் வளர்ச்சிக்கும், கைவினைப் பொருள் உற்பத்திக்கும், பேரளவு தேன் உற்பத்திக்கும், மீன்பிடிப்பிற்கும் அரசாங்கம் பெருமளவில் உதவிபுரிகிறது.
பிரான்ஸ்லே படித்த பிரெஞ்சு மொழி பேசும் படித்த தமிழர்கள் மருத்துவர்களாகவும் வழக்குரைஞர்களாகவும் ஆசிரியர்களாகவும் விரிவுரையாளர்களாகவும் பணிபுரிகின்றனர். வாழ்க்கைத்தரம் : 1947 இல் இத்தீவுபிரான்சின் அங்க நாடாக மாறியதிலிருந்து இங்குள்ளோரின் வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. பிரான்ஸ் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அத்தனைச் சலுகைச்சட்டங்களும் இங்கும் அப்படியே நடைமுறைக்கு வருவதால் இதனைச் சுற்றிலும் உள்ள நாடுகளின் வாழ்க்கைத் தரத்தைக்காட்டிலும் ரீயூனியன் மக்களின் வாழ்க்கைத்தரம் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகின்றது.
உணவு முறை:-
தமிழர்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை. பெரும்பாலான தமிழ் நாட்டுப் பலகாரங்கள் இங்கு மறந்துபோய் விட்டன. ரொட்டியும் வெண்ணெயும் காலைச் சிற்றுண்டி. பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு உணவுப் பழக்கவழக்கங்களே இங்கு அதிகம் இடம் பெறுகின்றன. கோயில் திருவிழாக்களின் போதும், மதச்சடங்குகள், வீட்டுப்பண்டிகைகளின் போதும் ஓரளவு தமிழ்ச் சமையல் முறை கையாளப்படுகிறது.
ஆடை முறை:-
ரீயுனியன் தமிழரின் ஆடைமுறையை உணர்த்தும் புகைப்படங்கள்:-
ரீயுனியன் தமிழர்களின் உடை கலாச்சாரம் மாறினாலும் இப்போதும் இந்துக்கோயில் திருவிழாக்களிலும், தமிழ்ச் சமய திருமணச் சடங்குகளிலும் ஆர்வமுள்ள இளைஞர் பலர் வேட்டி, சட்டை அல்லது ஜிப்பா அணிந்தும், பெண்களில் பலர் புடவை, ரவிக்கை அணிந்தும் தமிழ்க் கலாச்சாரத்தை வெளிப்படுத்துகின்றனர். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, விரதம், தீமிதிப்பு முதலிய விழாநாட்களின் போது பெண்கள் புடவையும் நகைகளும் அணிந்து கொள்கிறார்கள்.
தமிழரின் நிலை:-
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பிரெஞ்சு முதலாளிகளின் நம்பிக்கைப் பெற்றவர்களாகப் பணிபுரிந்த போது, ரீயூனியன் எங்கும் தமிழ் மயமாக இருந்து, தமிழர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே கருத்துப்பரிமாற்றம் நிமித்தம் பிறந்ததே கிரியோல் (Creole) என்னும் கொச்சைமொழி. இம்மொழியில் சொற்கள் பிரெஞ்சுச்சொற்களாகவும் கருத்துவெளியீடு தமிழ் முறையாகவும் இருப்பதால் இந்தக்கிரியோல் அன்றைய தமிழ் மக்களின் படைப்பேயாகும். இப்போது உள்ள ரீயூனியன் தமிழர்கள் தமிழை மறந்துவிட்டனர். அனைவரும் கிரியோல் மொழியே பேசுகின்றனர். கிரியோல் மொழி ரீயூனியனின் தேசிய மொழியாக விளங்குகிறது. கிரியோல் மொழி தற்போது இத்தீவின் 90% மக்களின் வீட்டு மொழியாக உள்ளது படித்தவர்கள் மட்டுமே பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். பிரெஞ்சு மொழி பணித்துறை, அலுவலகமொழியாக விளங்குகிறது. பொதுவாக 100 க்கு 95 தமிழர்களுக்கு தமிழ் எழுதவோ படிக்கவோ பேசவோ தெரியாது. பாரீஸ்-புதுவை தொடர்புள்ள ஒரு சிலர் தமிழ் பேசுகின்றனர். இன்றைய ரீயூனியன் தமிழர்கள் கல்வியில் முதன்மையிடம் வகிக்கிறார்கள். மருத்துவர்கள், சட்டமேதைகள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், பொறியியல் வல்லுனர்கள் என்று எல்லா நிலையிலும் இவர்கள் உயர்ந்து விளங்குகிறார்கள்.
அண்மைகாலமாகத் தமிழ்மக்கள் அதிகமாகவசிக்கும் செயின்ட் ஆண்டிரியிலுள்ள மூன்று உயர்நிலைப் பள்ளிகளிலும், அவற்றுடன் இணைந்து செயல்படும் செயின்ட்பனுவாவிலுள்ள ஒரு கல்லூரியிலும் விருப்பப்பாடமாகத் தமிழ் கற்பிக்கப்படுகிறது. இதுவன்றி, பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாகிய Institute of Linguistics and Anthropology இல் பதினெட்டு வயது மேற்பட்டோருக்குத் தமிழ் போதிக்கப்படுகிறது. இதனால் ரீயூனியனில் தமிழின் நிலை மேம்பட்டு வருகிறது. பிரெஞ்சு மொழியில் பேராசிரியராக வளர்ந்துள்ள திரு.வி.தேவக்குமாரன் பலஆண்டுகளுக்கு முன் தமிழ் பிரெஞ்சுப் பாட நூல் எழுதிப் படிப்பிக்கச் செய்தார். அவர் எழுதிய நூலின் பெயர்IJ 'appreds le tamoul ஆகும். அவர் ஓர் தமிழாசிரியர். ரீயூனியனில் தமிழ் கற்பித்த முதல் தமிழாசிரியர் மொரீசியஸைச் சேர்ந்ததிரு. சங்கிலி என்பவர் ஆவார். பிரெஞ்சு மூலம் தமிழ் படிக்க, பாலர் பாடநூல் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
தொலைக்காட்சி, ஒலி, ஒளிப் பதிவு நாடாக்கள், பஜனைப் பாராயணம், கோயில் ஆகியவற்றிலும் தமிழைப் பயன்படுத்த தொடங்கி விட்டார்கள்.
மறந்த தமிழை மீண்டும் மலரச் செய்யும் வாய்ப்புகளும் எண்ணமும் ரீயூனியன் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ்மொழி மீதான ஆர்வம் இதன் மூலம், குறிப்பாக இளம் பரம்பரையினரிடையே மேலும் வளர்ச்சியடைய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்ப்பண்பாட்டையும் ரீயூனியன் தமிழர்கள் முற்றிலும் இழக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பெயர்சூட்டும்போது தமிழ் இந்துப் பெயர்களையே வைக்கிறார்கள். அரங்கசாமி, இராமாசாமி, கிருட்டிணன், இராமன், முருகன், கணேசன் என்றப் பெயர்களை எங்கும் கேட்கலாம். காத்தாயி, முருவாய், இராமாய், மீனாட்சி, மீனா, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்களும் அதிகமாக உள்ளன.
மறந்த தமிழை மீண்டும் மலரச் செய்யும் வாய்ப்புகளும் எண்ணமும் ரீயூனியன் தமிழரிடையே வேரூன்றத் தொடங்கி இருக்கிறது. தமிழ்மொழி மீதான ஆர்வம் இதன் மூலம், குறிப்பாக இளம் பரம்பரையினரிடையே மேலும் வளர்ச்சியடைய சூழ்நிலை உருவாகியிருக்கின்றது. தமிழ்ப்பண்பாட்டையும் ரீயூனியன் தமிழர்கள் முற்றிலும் இழக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பெயர்சூட்டும்போது தமிழ் இந்துப் பெயர்களையே வைக்கிறார்கள். அரங்கசாமி, இராமாசாமி, கிருட்டிணன், இராமன், முருகன், கணேசன் என்றப் பெயர்களை எங்கும் கேட்கலாம். காத்தாயி, முருவாய், இராமாய், மீனாட்சி, மீனா, மைனாவதி, காமாட்சி போன்ற பெயர்களும் அதிகமாக உள்ளன.
பெரும்பாலோருக்கு தமிழ்ப்பெயர்களோடு கிறித்துவப் பெயர்களும் உண்டு. உதாரணமாக பிலிப் இராமன். ரீயூனியன் சட்டமன்றத்தில் சில தமிழர் இருக்கின்றனர். சம உடைமைக் கட்சி, தொழிற்கட்சிகளில் பெரும்பான்மை தமிழர்கள் அங்கம் வகிக்கிறார்கள். பிரான்சின் அங்க நாட்டுக்கான நாடாளுமன்றத்தின் ரீயூனியன் பகுதிக்கு உரிய ஐந்து உறுப்பினர்களில் (Five deputies) ஒருவர் தமிழர்; இவர் பெயர் வீராப்பாபிள்ளை. இவருக்குத் தமிழ் தெரியாது. மேலும் ரீயூனியனிலிருந்து செல்லும் மூன்று சட்டமன்றமேலவை உறுப்பினர்களில் (Senators) இருவர் தமிழர்கள்.
தமிழக உறவைநாடும் ரீயூனியன் தமிழர்கள் :-
தமிழ் மொழியினை இத்தீவில் இன்னும் பரவலாகக் கற்பித்துப் பரப்பபோதிய அளவு தமிழாசிரியர்களையும், தமிழ்நாட்டுக்கே உரியநாதஸ்வர, பரதக்கலைகளைக் கற்றுக்கொடுக்கும் இசை, நடன ஆசிரியப் பெருமக்களையும் அனுப்பிவைக்க தமிழ்நாட்டின் பேருதவியினை இங்குள்ள தமிழர்கள் எதிர்பார்த்துள்ளனர். தமிழ்நாட்டுக்கலைகள், கோயில்கள், நகர மற்றும் நாட்டுப் புறவாழ்க்கை முறைகள், விழாக்கள், பண்டிகைகள் ஆகியவற்றைப் பற்றிய செய்திப்படங்களை அனுப்பும் படிவேண்டுகின்றனர். ரீயூனியனில் உள்ள இளைஞர்கள் தமிழகம் வந்து கலாச்சார, பண்பாட்டுத்துறைகளில் நேரடி அனுபவம் பெறுவதற்கு வேண்டிய உதவிகளை எதிர்பார்க்கிறார்கள்.































